Thursday, January 1, 2009

குள்ள நரியின் அராஜகம்

எனக்கு மிகவும் பிடித்த ப்ரோவ்செர்களில் Firefox முதன்மையானது. ஆனால் இப்போது இதை நான் மிகவும் வெறுக்கிறேன். காரணம் இந்திய மொழிகளில் ஹிந்தி , தெலுங்கு,மராட்டி, கன்னடம் போன்ற மொழிகளில் Firefox தனது Browser ஐ வெளியிடும் பொது ஏன் இன்னமும் தமிழ் வெளியீடு மட்டும் வரவில்லை.

இத்தனைக்கும் தமிழ் பேசும் மக்கள் உலகமெங்கும் 7.5 கோடி மக்கள் இருகிறார்கள். மூன்று நாடுகளில் தேசிய மொழியாக உள்ளது. 3000 ஆண்டு கால தொன்மையான , இன்னும் பரவலான மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கிறது.


இத்தனை பெருமைகள் இருந்தும் , நமது தமிழில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மென்பொருள்கள் வருவதில்லை. இதைஅந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு உணர்த்துவதும் இல்லை . காரணம் நாம் தான். தமிழனும் தமிழனும் சந்தித்து பேசும்போது கூட தமிழ் என்பது தங்கள் தகுதிக்கு இழுக்கு என்று எண்ணுவது. நல்ல தமிழில் பேசுபவனை அதிகம் படிப்பறிவு இல்லாதவனாக எண்ணி கொள்வதே காரணம்.

இன்னும் முழுதாக நாம் விடுதலை அடைய வில்லை என்பதையே இது காட்டுகிறது. என்னைக்குடா நீங்க thirunthuveenga .