Thursday, November 13, 2008

நாகரீக கோமாளி

நான் ஒரு நாகரீக கோமாளி
என் பேச்சுக்கு எப்போதும் இளி

குண்டக்க மண்டக்க எல்லாம் பேசுவேன்.
ரண்டக்க ரண்டக்க பாட்டும் பாடுவேன்.
குலுங்க குலுங்க சிரிக்கவும் வைப்பேன்.
மூளைக்கு கொஞ்சம் வேலையும் வைப்பேன்.
குழியில் யாரையும் தள்ளவும் மாட்டேன்.

பள்ளியில் படித்தது ஏட்டு சுரக்கா
வாழ்க்கைக்கு தேவை அதிலே இருக்கா
M.Sc படிச்சா என்னோட அக்கா
வேலை இல்லாம வீட்டிலே இருக்கா
கல்யாணம் ஆனா கணவனே முருகா

என்னத்த சொல்ல எல்லாமே இப்படித்தான்.
தொலஞ்சது ஓரிடம் தேடுவது வேறிடம்
படிச்சது ஓரிடம் பிழைச்சது வேறிடம்
பெற்றது ஓரிடம் கொடுப்பது வேறிடம்
உற்றது ஓரிடம் நானிருப்பது வேறிடம்

No comments: