Thursday, November 13, 2008

சட்டமில்லா கல்லூரி

அடிக்கிறாங்க அடிக்கிறாங்க என்ன போட்டு அடிக்கிறாங்க..
பார்க்கிறாங்க பார்க்கிறாங்க சுத்தி நின்னு பார்க்கிறாங்க..
விரட்டுறாங்க விரட்டுறாங்க போலிசு முன்ன விரட்டுறாங்க
நிக்கிறாங்க நிக்கிறாங்க கண்டுக்காம நிக்கிறாங்க..

சட்டம் படிக்க காலேஜ் வந்தேன்
விட்டா போதும் ஓடி போறேன்
சட்டம் ஒரு இருட்டறைனு
சரியா சொன்னார் அண்ணாதுரை

பட்ட பகலென்றாலும் பலபேரு பார்த்தாலும்
சட்டம் மட்டும் இருட்டறை

கண்ணு முன்னாடி நடந்தாலும்
காக்க வக்கிலேனா காவல் காப்பவன்
நாக்க புடிங்கிகிட்டு சாகலாமே..
காக்கி உடை எதுக்குன்னு
எங்க ஊரு பெருசு எகத்தாளமா பேசுது..

அத்தை அடிச்சாலோ அல்லிப்பூ செண்டால..
மாமன் அடிச்சானோ மல்லிகப்பூ செண்டால..
என்று ஆராத்தி தூங்கவச்சா என்னோட செல்ல ஆத்தா..
அய்யோ என் புள்ள அய்யோ என் புள்ள..
அழுது துடிதுடிச்ச என்னோட நிலை பார்த்து..

இன்றைய மாணவர்கள் நாளைய நீதிபதிகள்..
கையில் உருட்டு கட்டையுடன்

No comments: